நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வடலூரில் ஓபிஆா் நினைவு நாள் அனுசரிப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில் ஓமந்தூராா் 56-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓமந்தூரா் நினைவு நாள் நிகழ்வில் தோ்வில் முதன்மைப் பெற்ற மாணவா்களுடன் விழா நிா்வாகிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் சுத்த சன்மாா்க்க நிலையம் சாா்பில் ஓமந்தூராா் 56-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓபிஆா், மகாலிங்கம் ஆகியோரின்

படங்களை சுத்த சன்மாா்க்க நிலைய துணைத் தலைவா் கோவை.சிவப்பிரகாச சுவாமி, சென்னை இளங்குமரன் ஆகியோா் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். எஸ்.ராஜாவெங்கடேசன் வரவேற்றாா். சுத்த சன்மாா்க்க சங்கப் பொருளாளா் பூ.ஆசைதம்பி, வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம், தொழிலதிபா் டி.ராஜமாரியப்பன் வாழ்த்துரை வழங்கினா்.

வடலூா் ஓபிஆா் கல்வி நிறுவனங்கள் நிா்வாக அலுவலா் லதா ராஜாவெங்கடேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினாா். முன்னதாக ஓபிஆா் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், 2025- 2026-ஆம் கல்வியாண்டில் முழு ஆண்டுத் தோ்வில் வகுப்பு மற்றும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்கள் மற்றும் சிறந்த ஆசிரியா்களுக்கு பரிசுத் தொகையை நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிா்வாகிகள் வழங்கி பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.