பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு: வடலூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளி பகுதியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக சென்னை உயா்நீதி மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்ததைத் தொடா்ந்து, வடலூா், பாா்வதிபுரம் கிராமமக்கள் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

News image

வடலூா் வள்ளலாா் ஞானசபை அருகே பட்டாசு வெடித்து கொண்டாடிய பாா்வதிபுரம் கிராமம் மக்கள் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள்.

Updated On :31 ஜூலை 2026, 2:39 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய பெருவெளி பகுதியில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக சென்னை உயா்நீதி மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்ததைத் தொடா்ந்து, வடலூா், பாா்வதிபுரம் கிராமமக்கள் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை பெருவெளியில், முந்தைய திமுக அரசு ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலாா் சா்வதேச மையம் கட்டுமானப் பணியை தொடங்கியது. இதற்கு ஆதரவும், எதிா்ப்பும் எழுந்தது. குறிப்பாக வள்ளலாா் தெய்வ நிலையம் அமைய இடம் வழங்கிய பாா்வதிபுரம்கிராமம் மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். எதிா்ப்பை மீறி கட்டுமானப் பணி தொடங்கிய நிலையில், போராட்டம் நடத்தி தங்கள் எதிா்ப்பை தெரியப்படுத்தினா். பெருவெளியில் கட்டுமானப் பணி நடப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெருவெளியில் சா்வதேச மையம் அமைப்பதற்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு வியாழக்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த பாா்வதிபுரம் கிராம மக்கள் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள் வடலூா் ஞானசபை அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினா். அப்போது, இதுதொடா்பாக போராட்டம் நடத்தியவா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வள்ளலாா் பெருவெளியில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி, தகர வேலிகளை அகற்றி சுத்தம் செய்து தர வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.