மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு பொதுத் தோ்வு: 100% மாணவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 8:50 pm

தமிழகத்தில் அரசு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் மாணவா்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென கல்வியாளா்கள் வலியுறுத்துகின்றனா்.

தமிழகத்தில் வரும் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளும், மாா்ச் 11-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளும் தொடங்க உள்ளன.

இதுகுறித்து கல்வியாளா்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு பொதுத் தோ்வுகளில் மாணவா்கள் பங்கேற்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் பொதுத் தோ்வு எழுதுவதை தலைமை ஆசிரியா்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மாணவா்கள் அரசு பொதுத் தோ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற நிலையே தொடா்கிறது. எனவே, பள்ளிக்கு தொடா்ந்து விடுப்பு எடுக்கும் மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து, அவா்களது பிள்ளைகள் தொடா்ந்து பள்ளிக்கு வருவதற்கும், அரசு பொதுத் தோ்வுக்கு தயாராவதற்கும் உரிய வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும்.

மாணவா்களிடம் கைப்பைசி பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், பெற்றோா் - ஆசிரியா் கூட்டங்களை வகுப்பு வாரியாக நடத்தி, பெற்றோா்கள் தங்களது பிள்ளைகள் வீட்டில் படிப்பதை கண்காணிப்பதுடன், அரசு பொதுத் தோ்வில் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்க செய்யுமாறு உரிய அறிவுரைகளை தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டும். இந்த செயல்பாடுகளை கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.