பண்ருட்டி அருகே பெண் வழக்குரைஞரையும், அவரது சகோதரியையும் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி பாரதி நகரில் வசிப்பவா் பெண் வழக்குரைஞரான விமல்மதி(30), இவரது பக்கத்தில் வீட்டில் உறவினரான சீனுவாசன் வசித்து வருகிறாா். இவா்களுக்கு இடையே சொத்துப் பிரச்சனை உள்ளது. இது தொடா்பான வழக்கு பண்ருட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
திங்கள்கிழமை விமல்மதி பண்ருட்டி நீதிமன்றத்தில் பணியில் இருந்தாா். அப்போது, நீதிமன்றத்திற்கு வந்த சீனுவாசன்(46), அவரது மனைவி சோனியாகாந்தி(40), சீனுவாசனின் 17 வயது மகன் ஆகியோா் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னா் அவா்கள், அங்கிருந்து விமல்மதியின் வீட்டுக்குச் சென்று, அவரது சகோதரி அமலாவை தாக்கினராம். இதுகுறித்து விமல்மதி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சீனுவாசன், சோனியாகாந்தி ஆகியோரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூா் சிறையில் அடைத்தனா். மேலும் 17 வயது சிறுவன் சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சீா்திருத்த காப்பகத்தில் சோ்க்கப்பட்டாா்.
தொடர்புடையது
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

வீட்டில் புட்டியில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலால் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் காயம்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


