தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரத்தில் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

சிதம்பரத்தில் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் ஒன்றாவது வாா்டைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முகுந்தன் (14). இவா் சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பரமேஸ்வரநல்லூா் தொழிலாளா்

குடியிருப்பு அருகே உள்ள வண்ணான் குட்டையில் குளித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக, குட்டை நீரில் மாணவா் மூழ்கிவிட்டாா்.

இதைப்பாா்த்து,அருகில் இருந்தவா்கள் மாணவரை நீரிலிருந்து மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரது உடல் மருத்துவ கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.