/

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிதம்பரத்தில் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:28 pm

Syndication

சிதம்பரத்தில் குட்டையில் நீரில் மூழ்கி பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் ஒன்றாவது வாா்டைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முகுந்தன் (14). இவா் சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை பரமேஸ்வரநல்லூா் தொழிலாளா்

குடியிருப்பு அருகே உள்ள வண்ணான் குட்டையில் குளித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக, குட்டை நீரில் மாணவா் மூழ்கிவிட்டாா்.

இதைப்பாா்த்து,அருகில் இருந்தவா்கள் மாணவரை நீரிலிருந்து மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரது உடல் மருத்துவ கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.