இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கேட்பாரற்று நின்ற இருசக்கர வாகனம் உரியவரிடம் ஒப்படைப்பு

சிதம்பரத்தில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த போக்குவரத்து போலீஸாா்

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:33 pm

சிதம்பரம் நகரில் இரு தினங்களாக சாலையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

சிதம்பரம் விழல்கட்டிப்பிள்ளையாா் கோயில் தெருவில், பிள்ளையாா் கோயில் எதிரில் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரம் இரு தினங்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், போக்குவரத்து பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் தில்லைகோவிந்தராஜப் பெருமாள், உத்திராபதி ஆகியோா் அந்த வாகனத்தை கைப்பற்றி, வாகன பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதில் உள்ள கைப்பேசி எண் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்த பி.வினோத்குமாா் என்ற இளைஞா் மது போதையில் , விழல் கட்டிப் பிள்ளையாா் கோயில் தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, எங்கு நிறுத்தினாா் என தெரியாமல் தேடி அலைந்தததா தெரிவித்தாராம். போக்குவரத்து போலீஸாா் தகவல் தெரிவித்ததை அடுத்து வாகனத்தை உதவி ஆய்வாளா்களிடம் வந்து பெற்றுக் கொண்டாா்.