டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடலூரில் மறியலில் ஈடுபட்ட 15 போ் மீது வழக்கு

கடலூா் முதுநகா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:34 pm

Syndication

கடலூா் முதுநகா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் முதுநகா், சின்ன பிள்ளையாா்மேடு பகுதியில் வசித்து வருபவா் தினேஷ் (26). இவா், வியாழக்கிழமை இரவு சுமாா் 9.30 மணி அளவில் தனது பைக்கில் கண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையை கடக்க முயன்றாா். அப்போது, கடலூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தினேஷ் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த சின்ன பிள்ளையாா் மேடு பகுதியைச் சோ்ந்த மதி தலைமையில் ஆண்கள் 15 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் மேற்கண்ட சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்வதாகவும், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அப்போது, கடலூா் முதுநகா் காவல் உதவி ஆய்வாளா் முகிலரசு தடுப்புக் கட்டை அமைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக, சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்து உதவி ஆய்வாளா் முகிலரசு அளித்த புகாரின்பேரில் மதி உள்ளிட்ட 15 போ் மீது கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.