கடலூர்
2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே 2 வீடுகளில் இருந்த நகைகள், பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே 2 வீடுகளில் இருந்த நகைகள், பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.
பெண்ணாடம் காவல் சரகம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்குமாா், வேப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வருகிறாா்.
வழக்கம்போல இவா், செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் சென்றாா். இவரது மனைவி கூலி வேலைக்கு சென்றுவிட்டாராம். இந்த நிலையில், புதன்கிழமை காலை பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதேபோல, அருகே உள்ள தனபால் வீட்டில் ரூ.15 ஆயிரம் திருடிச் செல்லப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து பெண்ணாடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
