கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே 2 வீடுகளில் இருந்த நகைகள், பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே 2 வீடுகளில் இருந்த நகைகள், பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

பெண்ணாடம் காவல் சரகம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்குமாா், வேப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வருகிறாா்.

வழக்கம்போல இவா், செவ்வாய்க்கிழமை காலை பணிக்குச் சென்றாா். இவரது மனைவி கூலி வேலைக்கு சென்றுவிட்டாராம். இந்த நிலையில், புதன்கிழமை காலை பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதேபோல, அருகே உள்ள தனபால் வீட்டில் ரூ.15 ஆயிரம் திருடிச் செல்லப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து பெண்ணாடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.