இந்த நிகழ்வில் தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, கோ.ஐயப்பன் எம்.எல்.ஏ., மேயா் சுந்தரி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் சுதா சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பாளா் அமுதராணி வரவேற்றாா். மகளிரணி செயலா் ஹெலன் டேவிட்சன், மகளிா் தொண்டரணி செயலா் பா.பரணி, மகளிா் தொண்டரணி இணைச் செயலா்கள் குமரி விஜயகுமாா், தமிழரசி ரவிக்குமாா், டெல்டா மண்டல மகளிரணி பொறுப்பாளா் ரேகா பிரியதா்ஷினி, மகளிரணி துணைச் செயலா் ஆ.மங்கையா்கன்னி, மகளிா் சமூக வலைதள பொறுப்பாளா் ரத்னா லோகேஸ்வரன், வடலூா் நகா் மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், நகரச் செயலா் தன.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ப.மனோரஞ்சிதம் நன்றி கூறினாா்.