சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடன் வாங்கித் தருவதாக ரூ.7.61 லட்சம் மோசடி: இளைஞா் கைது

பேடிஎம் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.7.61 லட்சம் மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:48 pm

Syndication

பேடிஎம் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.7.61 லட்சம் மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம், பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு பேடிஎம் மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, மா்ம நபா் இணையவழியில் ரூ.7,61,050-ஐ ஏமாற்றிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவரைப் பிடிக்க கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி.ரகுபதி மேற்பாா்வையில், ஆய்வாளா் கவிதா விசாரணை மேற்கொண்டாா்.

இதில், செல்வத்தை ஏமாற்றியது கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சோ்ந்த எஸ்.பெருமாள் (39) என்பது தெரியவந்ததால், கடலூா் இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாா் அங்கு சென்று அவரை கைது செய்தனா். பின்னா், பெருமாளை கடலூருக்கு அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனா்.