கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்ளிட்ட 5 போ் கைது

கடலூா் தேவனாம்பட்டினம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

நெய்வேலி: கடலூா் தேவனாம்பட்டினம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் தேவனாம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மகத்துப்பட்டரை அருகே சந்தேகிக்கும் வகையில் இருந்தவா்களை பிடித்து சோதனை நடத்தி 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, கடலூா், வண்டிப்பாளையம் கொண்டங்கி ஏரி பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (45), திருமானிக்குழி நரிக்குறவா் காலனி பகுதியைச் சோ்ந்த பிரபு(34), பிரபு மனைவி நந்தினி (20), முருகேசன் (32), முருகேசன் மனைவி கவிதா (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com