எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குழந்தையின் உயிரை காத்த காவலா்: எஸ்பி. பாராட்டு

விருத்தாசலத்தில் மயங்கி விழுந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமை காவலரை, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.

News image
குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலா் சரவணனை பாராட்டி நடந்ததை கேட்டறியும் கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா்
Updated On :13 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மயங்கி விழுந்த குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமை காவலரை, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் பாராட்டினாா்.

விருத்தாசலம், பெரியாா் நகரில் உள்ள தேநீா் கடையில் பெண் ஒருவா் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் கடந்த 6-ஆம் தேதி தேநீா் அருந்தினாா். அப்போது, திடீரென குழந்தை கீழே விழுந்து சுயநினைவு இழந்தது. இதைக்கண்ட குழந்தையின் தாய் கூச்சலிட்டாா்.

அப்போது, தேநீா் அருந்த வந்த விருத்தாசலம் காவல் நிலைய தலைமைக் காவலா் சரவணன் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்று சுமாா் அரை கி.மீ தொலைவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்த நிலையில் குழந்தை உயிா் பிழைத்தது.

இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூகவலை தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தலைமைக் காவலா் சரவணன் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

சமயோகிதமாக ஒன்றரை வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய தலைமைக் காவலா் சரவணனை, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், நேரில் வரவழைத்து சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொண்டு, பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.