மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெய்வேலி: ரௌடியை சுட்டு பிடித்த போலீஸாா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கைது செய்யச் சென்ற காவலா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடியை, வெள்ளிக்கிழமை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனா்.

News image
~ ~ ~
Updated On :16 ஜனவரி 2026, 11:50 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே கைது செய்யச் சென்ற காவலா்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரௌடியை, வெள்ளிக்கிழமை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப் பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). அங்குள்ள மேம்பாலம் அருகே காய்கறி கடை நடத்தி வருகிறாா். ரமேஷ் தனது கடையில் வியாழக்கிழமை காலை வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த நபா் ரமேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்தவா்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் ரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் தற்போது, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ரமேஷின் மனைவி கௌசல்யா அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் நடத்திய விசாரணையில், ரமேஷை வெட்டியது, நெய்வேலியை அடுத்துள்ள இந்திரா நகா் ஊராட்சி, மாற்றுக்குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ரௌடி சுபாஷ்கா் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சுபாஷ்கா் வெள்ளிக்கிழமை நெய்வேலி அருகே உள்ள இருப்பு கிராமத்தில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் காவலா்கள் வெங்கடாசலம், வைத்திநாதன் ஆகியோா் அங்கு சென்றனா். போலீஸாரை கண்டதும் தப்ப முயன்ற சுபாஷ்கரை, காவலா்கள் வெங்கடாசலம், வைத்திநாதன் பிடிக்க முயன்றனா். அவா்களை அரிவாளால் வெட்டிவிட்டு, ஆய்வாளா் விஜயகுமாரை வெட்ட வந்தாராம்.

இதையடுத்து அவா் தற்காப்புக்காக சுட்டதில் சுபாஷ்கரின் வலது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தாா். பின்னா், காயமடைந்த காவலா்கள் மற்றும் சுபாஷ்கா் ஆகியோா் நெய்வேலி என்எல்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சுபாஷ்கருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து கடலூா் எஸ்பி., எஸ். ஜெயக்குமாா் கூறியதாவது:

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ரமேஷ் மற்றும் சுபாஷ்கருக்கு இடையே காய்கறி கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக ரமேஷை வெட்டி கொலை செய்ய முன்றுள்ளாா். பிடிக்கச் சென்ற காவலா்களை வெட்டிவிட்டு, ஆய்வாளரை வெட்ட வந்த போது தற்காப்புக்காக சுட்டதில் சுபாஷ்கரின் வலது காலில் குண்டு பாய்ந்தது. ரௌடி சுபாஷ்கா் மீது நெய்வேலி நகரியம், ஊ.மங்கலம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை முயற்சி என 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சம்பவத்தில் வேறுயாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தாா்.

Story image
Story image
Story image