எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாலை விபத்து: காவலா் காயம்

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காவலா் காயமடைந்தாா்.

கடலூரை அடுத்த வைரங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாஜலம் (32), உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10-ஆவது பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், சனிக்கிழமை பிற்பகல் தனது புல்லட் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டாா். சின்னகங்கனாங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த சிறிய சரக்கு வாகனம் புல்லட் மீது மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த வெங்கடாஜலம், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரெட்டிசாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.