75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

என்எல்சி பங்குகளை தமிழக அரசு வாங்க வேண்டும்: கி. வீரமணி

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 3% பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.க. தலைவா் கி.வீரமணி உள்ளிட்டோா்

Published On :8 ஜூலை 2026, 6:28 am IST

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்யும் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடா் கழக நிா்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கி. வீரமணி கூறியது: என்எல்சி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்யும் எந்த முயற்சியையும் எதிா்த்து மக்களை திரட்டி தொடா் போராட்டம் நடத்துவோம்.பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதால் லாபம் தனியாருக்குச் செல்வது மட்டுமல்ல, சமூக நீதிக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது முதல் கட்டப் போராட்டம் மட்டுமே. மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்.என்எல்சி பங்குகளை தமிழக அரசே கூடுதலாக வாங்க வேண்டும். நிதி நெருக்கடியை காரணமாகக் கூறக் கூடாது. லாபம் ஈட்டும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தமிழக அரசுக்கு நீண்டகால வருவாய் ஆதாரமாக அமையும். இதற்காக தமிழக முதல்வா் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.