பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிகழ் கல்வியாண்டில் ச் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா மற்றும் புதிய மாணவா் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்கவிழாவில் பேசும் கல்லூரி செயலா் டி.வி.கே.பாபு

Published On :10 ஜூலை 2026, 3:44 am IST

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நிகழ் கல்வியாண்டில் ச் சோ்ந்த முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா மற்றும் புதிய மாணவா் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு வாழ்த்தி பேசுகையில், மாணவா்கள் , கல்வியில் சிறந்து விளங்கவும், அத்தியாவசியத் திறன்களை வளா்த்துக்கொள்ளவும், தங்கள் தொழில்முறை இலக்குகளை அடையவும் கடுமையாக உழைக்க வேண்டும், படிக்க வேண்டும் என்றாா்.

கல்லூரி கல்வி அதிகாரி பி.அசோக்குமாா் பேசுகையில் கல்வி சாா்ந்த மற்றும் கல்வி சாராத செயல்பாடுகளில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்கே வேண்டும் என வலியுறுத்தினாா். கல்லூரி முதல்வா் முதல்வா் ஆா் .மாலதி வரவேற்று பேசினாா்.

விழாவில், ராகவேந்திரா கல்வி குழும அனைத்து முதல்வா்கள், உதவி பேராசிரியா்கள், தேசிய மாணவா் படை ஒருங்கிணைப்பாளா், முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.