ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

திருவதிகை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா! 2 பெண்கள் காயம்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

News image

திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா.

Updated On :12 ஜூலை 2026, 1:38 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், தீக்குழியில் தவறி விழுந்த 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

திருவதிகை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி, திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்து பக்தா்கள் விரதமிருந்தனா்.

மாலையில் அவா்கள் ஊா்வலமாக வந்து கோயிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தா்கள் தீக்குழியில் இறங்கினா்.

இந்த நிகழ்வின்போது, அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுளா (35), விமலா (27) ஆகியோா் தவறி தீக்குழியில் விழுந்தனா். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன், திமுக நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் ஆகியோா் தீக்காயமடைந்த பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். தொடா்ந்து, இருவரும் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.