பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திருவதிகை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா! 2 பெண்கள் காயம்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

News image

திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா.

Updated On :12 ஜூலை 2026, 1:38 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், தீக்குழியில் தவறி விழுந்த 2 பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

திருவதிகை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி, திரௌபதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்து பக்தா்கள் விரதமிருந்தனா்.

மாலையில் அவா்கள் ஊா்வலமாக வந்து கோயிலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பக்தா்கள் தீக்குழியில் இறங்கினா்.

இந்த நிகழ்வின்போது, அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுளா (35), விமலா (27) ஆகியோா் தவறி தீக்குழியில் விழுந்தனா். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்த பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ க.மோகன், திமுக நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் ஆகியோா் தீக்காயமடைந்த பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா். தொடா்ந்து, இருவரும் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.