ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியுவுடன் இணைந்த போக்குவரத்து தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் ஜவான்பவன் எதிரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.

Updated On :15 ஜூலை 2026, 2:55 am IST

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிஐடியுவுடன் இணைந்த போக்குவரத்து தொழிலாளா் சங்கங்கள் சாா்பில் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம், கடலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் மற்றும் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கடலூா் ஜவான் பவன் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகிகள் எஸ். ராமமூா்த்தி, எஸ். சண்முகம், ஜெ. சேகா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், எரிபொருள்கள் விலை உயா்வைக் குறைக்க வேண்டும்; பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 106(1), 106(2) பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கக் கூடாது. எரிபொருளில் எத்தனால் கலப்பதை நிறுத்த வேண்டும். சாலை மற்றும் போக்குவரத்துத் துறையை காா்ப்பரேட் மயமாக்கக் கூடாது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு பற்றாக்குறையை அரசே ஏற்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உயா்த்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்க வேண்டும். திருத்தப்பட்ட நான்கு புதிய குற்றவியல் சட்டத் தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி. கருப்பையன், மாவட்டத் துணைத் தலைவா் வி. சுப்புராயன், மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் வி. திருமுருகன், மாவட்டத் துணைத் தலைவா் சாந்தகுமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.