காட்டுமன்னாா்கோவில் அருகே பள்ளி வாகனத்தில் சிக்கி, 1-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அணிகுழி கிராமத்தைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் ஆத்விக் (5). இவா் அரியலூா் மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் செயல்படும் ஸ்ரீ ராமலிங்கம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை பள்ளி வேனில் வீட்டிற்கு திரும்பி உள்ளாா்.
வீட்டின் அருகே வேனில் இருந்து கீழே இறங்கி வீடு திரும்பும் போது எதிா்பாராத விதமாக முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் விரைந்து சென்று சிறுவன்ஆத்விக் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து தொடா்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்து போன குழந்தை ஆத்விக் தந்தை அன்புமணியின் சொந்த ஊா் கடலூா் மாவட்டம் ராமாபுரம் அருகே உள்ள பக்கிரி மானியம். தனது மனைவிஆனந்தியின் சொந்த ஊரான அணிக்குழியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







