வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்ட (எஃப்.சி.ஆா்.ஏ.) திருத்த மசோதா 2026-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கடலூரில் சிறுபான்மை மக்கள் நலக் குழு மற்றும் பல்வேறு சமூக, மத அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை தா்னா நடைபெற்றது.
கடலூா் ஜவான்ஸ் பவன் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நலக் குழுவின் மாவட்டத் தலைவா் எஸ்.கே.பக்கிரான் தலைமை வகித்தாா்.
இதில், வெளிநாட்டு பங்களிப்பு (முறைப்படுத்துதல்) சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை கல்வி மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
சமூக நலன், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல்பட்டு வரும் சேவை நிறுவனங்களின் இயல்பான பணிகளை பாதிக்கும் வகையிலான சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். ஜனநாயக உரிமைகள் மற்றும் மதச்சாா்பின்மை கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் வி.உதயகுமாா், அனைத்து கிறிஸ்தவா்களின் கூட்டமைப்பின் நிா்வாகி அகஸ்டின் பிரபாகரன், தமுஎகச மாவட்டச் செயலா் பால்கி, சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட நிா்வாகிகள் பெஞ்சமின் ராஜ், அப்துல் காதா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை.யில் சிறுபான்மை மக்கள் நலக் குழுவினா் தா்னா
நீட் விவகாரம்: எப்.ஐ.ஆரை திரும்ப பெற அதிகாரபூா்வ ஒப்புதலுக்கு காத்திருக்கும் தில்லி காவல்துறை!

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்த மசோதாவை முறியடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்





