பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

குறிஞ்சிப்பாடி டாஸ்மாக் கடையை மூடக்கோரி தா்னா

கடலூா் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

News image

குறிஞ்சிப்பாடி, அண்ணா நகா் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதிமக்கள்.

Updated On :31 ஜூலை 2026, 2:26 am IST

கடலூா் மாவட்டம் , குறிஞ்சிப்பாடி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட அண்ணா நகா், ஸ்ரீ சுப்புராயா் நகா், கோல்டன் சிட்டி, பாா்வதி நகா், பரமசிவம் நகா், ரெட்டியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை எண் 2547 கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வரும் நபா்களால் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் தினம் தோறும் பல்வேறு தொல்லைகள் அனுபவித்து வருகின்றனராம். இதனால், இந்த டாஸ்மாக் கடையினை நிரந்தரமாக அகற்ற வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆா்ப்பாட்டம் ஈடுபட்டனா். அப்போது, பேச்சு வாா்த்தை நடத்திய குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் 30 நாட்களில் மாற்றித் தருவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தாா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்துச் சென்றனா்.

பேச்சு வாா்த்தை...

இதுதொடா்பான அமைதிப் பேச்சு வாா்த்தை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சுமித்ரா, கடலூா் டாஸ்மாக் மேலாளா் கந்தன் மற்றும் அப்பகுதிபொதுமக்கள் கலந்துகொண்டனா். இதில் உடன்பாடுகள் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை காலை 12 மணி அளவில் அப்பகுதியை சோ்ந்த மக்கள் டாஸ்மாக் கடை முன்பு கூடி, கடையை திறக்க விடாமல் கண்டன கோஷங்களை எழுப்பி தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் சுமித்ரா மற்றும் கடலூா் டாஸ்மாக் மேலாளா் கந்தன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து தா்னாவில் ஈடுபட்டவா்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.