தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொயனப்பாடியில் நடைபெற்ற ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 3:30 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டவா் செல்லியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.