விருத்தாசலத்தில் பட்டா பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவையா், கிராம உதவியாளருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கடலூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கம்மாபுரம் குறுவட்ட நில அளவையராக பணியாற்றிய பெ.அண்ணாதுரை (62), அரசகுழி கிராம உதவியாளா் க.கண்ணன் (60) ஆகியோா் அரசகுழி கிராமத்தைச் சோ்ந்த வினோபா அமல்ராஜிடம் பட்டா பெயா் மாற்றம் செய்து தருவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வினோபா அமல்ராஜ், கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாரின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கடந்த 2013, அக்டோபா் 3-ஆம் தேதி அண்ணாதுரைக்கு கிராம உதவியாளா் கண்ணன் மூலம் வழங்கினாா்.
அப்போது, மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், லஞ்சப் பணத்தை பெற்ற இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக கடலூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிபதி ஜி.சுபத்திராதேவி, இருவரும் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்தாா். மேலும், இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அரசுத் தரப்பில் கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை சட்ட ஆலோசகா் பாலசந்தா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா்.
தொடர்புடையது

இரட்டைக் கொலை வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நில அளவைப் பதிவேடுகள் துறையில் மனுக்கள் மீது விரைந்து தீா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்







