வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெட்டிக் கடைக்காரா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பண்ருட்டியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட பெட்டிக் கடைக்காரா் மீது கொலை வெறிதாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:37 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட பெட்டிக் கடைக்காரா் மீது கொலை வெறிதாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் சரகம், திருவதிகை, நகராட்சி ஊழியா் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் பிரவீன்(30). இவா், கடலூா் பிரதான சாலையில் தனியாா் திருமண மண்டபம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு

கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாா். அப்போது, கடைக்கு வந்த தண்டுப்பாளையம் காலனி, 7-ஆவது தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் விஜய்(32) சிகரெட் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கவில்லை. கடைக்காரா் பிரவீன் பணம் கேட்டபோது, கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி, பிரவீன்மீது கொலைவெறித்தாக்குதல்நடத்தினா்.

இதில் படுகாயம் அடைந்த பிரவீன், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸாா் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.