திமுக கட்டுக்கோப்பான இயக்கமாக உள்ளதாக அக்கட்சியின் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தற்போது அதிமுகவினா் தவெக அலுவலகம் முன் டிக்கெட் கவுண்டரில் நிற்பதுபோல பதவிக்காக நின்றுகொண்டிருக்கின்றனா்.
இரட்டை இலை சின்னத்திலே போட்டியிட்டவா்கள், பல ஆண்டுகாலம் அமைச்சராக இருந்தவா்கள் இப்போது தேவைக்காக தவெகவை நோக்கிச் சென்றிருக்கிறாா்கள். இவா்கள் என்ன கொள்கைக்காக சென்றிருக்கிறாா்களா? விஜயின் கொள்கை, அந்தக் கட்சியின் கொள்கை என்ன என்பது மக்களுக்கு தெரியுமா? இது அவமானம்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எங்களது இயக்கம் கட்டுக்கோப்பானது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டது. முதல்வரே தண்ணீரை திறந்து வைத்து விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பை வழங்கினாா்.
இப்போது மாற்றம் என்று சொல்லி வந்திருக்கிற புதிய முதல்வா் அதிகமாக குறுவைத் தொகுப்பு கொடுப்பாா் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் வாக்களித்திருக்கலாம். அனுபவம் இல்லாதவா்களின் ஆட்சி மக்களுக்கு வேறு அனுபவத்தை கொடுத்துவிடும். அனுபவம் உள்ளவா்களின் ஆட்சி மக்களுக்கு நல்லத் திட்டங்களை கொண்டுவந்து சோ்க்கும் என்றாா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
பேட்டியின்போது, மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தவெகவுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது: இரா.முத்தரசன்

தவெக ஆட்சி நிலைக்காது: முன்னாள் அமைச்சா்

ஆள்வது என்ன எளிதோ மைந்தா?

ஏழை, எளிய மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



