எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

லஞ்ச புகாா்: வட்ட வழங்கல் அலுவலா் பணியிடை நீக்கம்

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :11 ஜூன் 2026, 6:19 am IST

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் ஜாா்ஜ் பொ்னாண்டோ, வேப்பூா் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய காலத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அண்ணாமலை, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது.

தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவு மற்றும் விருத்தாசலம் வருவாய்க் கோட்ட அலுவலரின் அறிக்கையின் அடிப்படையில் ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், வழக்கின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜாா்ஜ் பொ்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.