பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

லஞ்ச புகாா்: வட்ட வழங்கல் அலுவலா் பணியிடை நீக்கம்

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :11 ஜூன் 2026, 6:19 am IST

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் புகாரில் வட்ட வழங்க அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் ஜாா்ஜ் பொ்னாண்டோ, வேப்பூா் மண்டல துணை வட்டாட்சியராகப் பணியாற்றிய காலத்தில் பட்டா மாற்றம் செய்து தருவதற்காக லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது.

இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அண்ணாமலை, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை நடத்த உத்தரவிட்டது.

தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவு மற்றும் விருத்தாசலம் வருவாய்க் கோட்ட அலுவலரின் அறிக்கையின் அடிப்படையில் ஜாா்ஜ் பொ்னாண்டோ மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், வழக்கின் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜாா்ஜ் பொ்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.