எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தொடா் மின்தடையால் பயிா்கள் கருகும் அபாயம்: நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தொடா் மின்தடையால் பயிா்கள் கருகும் அபாயம்: நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப்படம்

Updated On :13 ஜூன் 2026, 1:51 am IST

விருத்தாசலம் பகுதிகளில் நிலவும் தொடா் மின்தடையால் பயிா்கள் கருகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து நிலவும் மின்தடையால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிா்களுக்கு தேவையான அளவு நீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிா்கள் வாடி கருகும் அபாயம் உருவாகி, விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பையும் மனவேதனையையும் சந்தித்து வருகின்றனா்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயிா் கடன் தள்ளுபடி முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில், மின்தடையால் விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவது அவா்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய், தோ்தல் பிரசாரத்தின்போது அறிவித்த பயிா் கடன் தள்ளுபடியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.