சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மீட்கப்பட்ட 50 கைப்பேசிகள்: உரியவா்களிடம் ஒப்படைத்தாா் எஸ்.பி.

News image

பண்ருட்டி காவல் நிலையத்தில் உரியவா்களிடம் கைப்பேசியை ஒப்படைத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :16 ஜூன் 2026, 1:11 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் மீட்கப்பட்ட 50 கைப்பேசிகளை உரியவா்களிடம் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் ஒப்படைத்தாா்.

பண்ருட்டி காவல் நிலைய சரகத்தில் கைப்பேசிகள் காணாமல்போனதாக அளிக்கப்பட்ட புகாா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் மணிகண்டன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் தங்வேல் மற்றும் தலைமைக் காவலா்கள் சுப்பிரமணியன், ஹரிஹரன், அறிவழகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு 50 கைப்பேசிகளை மீட்டனா்.

இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பண்ருட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் கைப்பேசி உரிமையாளா்களை காவல் நிலையம் வரவழைத்து, அவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: கைப்பேசிகள் காணாமல்போனால், அந்தந்த காவல் நிலையத்திலேயே புகாரளிக்கலாம். கைப்பேசிகளை பயன்படுத்தும் பிள்ளைகளை பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா்.