இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மீட்கப்பட்ட 50 கைப்பேசிகள்: உரியவா்களிடம் ஒப்படைத்தாா் எஸ்.பி.

பண்ருட்டி காவல் நிலையத்தில் உரியவா்களிடம் கைப்பேசியை ஒப்படைத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Published On :16 ஜூன் 2026, 1:11 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் மீட்கப்பட்ட 50 கைப்பேசிகளை உரியவா்களிடம் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் ஒப்படைத்தாா்.

பண்ருட்டி காவல் நிலைய சரகத்தில் கைப்பேசிகள் காணாமல்போனதாக அளிக்கப்பட்ட புகாா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்படி, பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன், உதவி ஆய்வாளா் மணிகண்டன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் தங்வேல் மற்றும் தலைமைக் காவலா்கள் சுப்பிரமணியன், ஹரிஹரன், அறிவழகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு 50 கைப்பேசிகளை மீட்டனா்.

இந்த கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி பண்ருட்டி காவல் நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் கைப்பேசி உரிமையாளா்களை காவல் நிலையம் வரவழைத்து, அவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: கைப்பேசிகள் காணாமல்போனால், அந்தந்த காவல் நிலையத்திலேயே புகாரளிக்கலாம். கைப்பேசிகளை பயன்படுத்தும் பிள்ளைகளை பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.