இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

விஷம் குடித்த அச்சக ஊழியா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விஷம் குடித்த அச்சக ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:27 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விஷம் குடித்த அச்சக ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (51). இவரது மகன் ரஞ்சித்குமாா் (30), அச்சகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோா் பெண் தேடினா். ஆனால், ரஞ்சித்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், யாரும் பெண் தர முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், மன விரக்தியில் இருந்து வந்த ரஞ்சித்குமாா், கடந்த மே 24-ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கி நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்ந்தனா். இருப்பினும், அங்கு ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.