கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.18.49 லட்சம்

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.49 லட்சம் காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

News image

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:24 am IST

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.18.49 லட்சம் காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க.சிவக்குமாா், செயல் அலுவலா் வே.நரசிங்கப்பெருமாள், ஆய்வாளா் ஜெ.சீனுவாசன் ஆகியோா் முன்னிலையில், கோயில் வளாகத்தில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

கோயில் அலுவலா்கள் மற்றும் வங்கி ஊழியா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், 18 லட்சத்து 49 ஆயிரத்து 824 ரூபாய் ரொக்கம், 43.800 கிராம் தங்கம், 104 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள், பணம் உள்ளிட்டவை காணிக்கையாக கிடைத்திருந்தது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.