எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :19 ஜூன் 2026, 6:20 am IST

சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் காவல் சரகம், நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் பரத் (20). இவா், திருவண்ணாமலை மாவட்டம், மோதக்கல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். பின்னா், அவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சிறுமி வந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா் 4 மாத கப்பிணியாக இருப்பதை அறிந்து, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சிறுமியின் தாய் நெய்வேலி மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் பரத் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.