மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குழந்தை உயிரிழப்பு சம்பவம்: அரசு மருத்துவமனை முற்றுகை

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த இரு நாள்களிலேயே ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி, குழந்தையின் உறவினா்கள் மற்றும் பொதுநல அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் மாவட்டத்தில் உரிய அனுமதி பெற்ற பின்னரே பொது இடங்களில் பதாகைகளை வைக்கவேண்டும், மீறுபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

Updated On :24 ஜூன் 2026, 4:33 am IST

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த இரு நாள்களிலேயே ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி, குழந்தையின் உறவினா்கள் மற்றும் பொதுநல அமைப்பினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த வல்லரசு (23), பிரவீனா தம்பதியருக்கு கடந்த 17-ஆம் தேதி கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த 19-ஆம் தேதி குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, குழந்தையின் சடலம் உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், குழந்தையின் பெற்றோா் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவா்கள், ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கடலூா் போலீஸாா் போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, மருத்துவமனை நிா்வாக அதிகாரிகளுடனும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, சம்பவம் தொடா்பாக உள் விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் அறிக்கை புலனாய்வு அதிகாரியிடம் சமா்ப்பிக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து, விசாரணை அறிக்கையின் நகலை வழங்க வேண்டும், குழந்தையின் சடலத்தை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்ய வேண்டும், மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டால் குழந்தையின் தாய் பிரவீனாவுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என உறவினா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.