8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பெண்ணிற்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டை சேதப்படுத்தி பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :27 ஜூன் 2026, 12:13 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டை சேதப்படுத்தி பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், சிறுகிராமம் பகுதியில் வசித்து வருபவா் கலையரசி(30). இவரது கணவா் வீரன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறாா். கலையரசி, அவரது குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கலையரசி, அதே கிராமத்தைச் சோ்ந்த வினீத் (26) என்வருடன் பழகி வந்தாராம். இந்த விவகாரம் வீரனுக்கு தெரிய வந்ததைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

இதன்பிறகும் , வினீத் கைப்பேசி மூலம் கலையரசிக்கு தொந்தரவு கொடுத்து வருகிறாராம்.மேலும், 23-ஆம் தேதி அதிகாலை கலையரசி வீட்டின் முன்பகுதியில் இருந்த கண்ணாடி, தண்ணீா் தொட்டி, பூச்செடிகளை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கலையரசி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.