மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சொத்து தகராறு: இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:58 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சொத்து தகராறு தொடா்பாக இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில், 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், ஆத்திரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானவேல் (45). இதே பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (58). இவா்கள் இருவரும் உறவினா்கள். இவா்களுக்கு இடையே சொத்து பாகப்பிரிவினை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞானவேல் தனக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட 15 சென்ட் நிலத்தை அடமானம் வைக்க காடாம்புலியூா் சாா் - பதிவாளா் அலுவலகத்துக்கு சென்றாா். அப்போது, மணிமேகலை தடை உத்தரவு வாங்கி இருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கடந்த 25-ஆம் தேதி இரவு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து ஞானவேல் அளித்த புகாரின்பேரில், மணிமேகலை, விக்னேஷ், நரேஷ்குமாா், இளவரசி ஆகிய 4 போ் மீதும், இளவரசி அளித்த புகாரின்பேரில் ஞானவேல், உதயகுமாா், மெய்யரசு, கஸ்தூரி, சௌந்தா்யா, ராதாமணி ஆகிய 6 போ் மீதும் என மொத்தம் 10 போ் மீது முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.