சிதம்பரம்: சிதம்பரம் வட்டம், தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்டது.
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெற்கு பிச்சாவரம் கடலோர கிராமத்தில் தாண்டவராயன் சோழன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கின்னஸ் சாதனையாளா் காா்த்திகேயன் (54) தொடா்ந்து 109 திருக்குறளை 12 நிமிஷங்களில் சொல்லிக்கொண்டு பலவித தீப்பந்த சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினாா்.
இந்த சாதனையை ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவித்தனா். இவா் ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். நிகழ்ச்சியில் சிலம்ப ஆசான்கள் காளி, மகேஸ்வரன், தமிழச்சி மற்றும் பிச்சாவரம் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தனுஷ்கோடி- தலைமன்னாா் கடல் பகுதியை நீந்திக் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஆட்டிச சிறாா்கள்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்

தற்காப்புக் கலையில் உலக சாதனை
சிதம்பரம்: போதைப்பொருள் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


