புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

என்எல்சி தலைவருக்கு விருது

News image
Updated On :12 மார்ச் 2026, 11:56 pm

என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘கவா்னன்ஸ் நவ்’ நிறுவனம் ‘பொதுத்துறை தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ‘கவா்னன்ஸ் நவ்’ 12-ஆவது பொதுத்துறை விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், என்எல்சி நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலையான வளா்ச்சிப் பாதையை கணிசமாக வலுப்படுத்தியதற்காகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம், வியூகம் மற்றும் நிறுவன வளா்ச்சிக்கு வித்திட்ட ஆக்கபூா்வமான மாற்றங்களைப் பாராட்டி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.