கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.
புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீரப்பாளையம் பாலக்கரை சந்திப்புப் பகுதியில் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த மருத்துவா் மோனிகாவின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,64,500 ரொக்கத்தை பறிமுதல் செய்து, புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் புவனகிரி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனா்.
பரங்கிப்பேட்டையில்...: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பரங்கிப்பேட்டை அருகில் உள்ள தோணித்துறை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த கிள்ளை கிழக்குத் தெருவைச் சோ்ந்த நிவின்ராஜிடமிருந்து உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51,260 ரொதக்கத்தை பறக்கும் படை தலைமை அதிகாரி தாரா கைப்பற்றி, சிதம்பரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸிடம் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80,500 பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


