கடலூா் மாவட்டத்தில் பொரிக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவந்த 300 ஆலிவ் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை கடலில் விடப்பட்டன.
ஆலிவ் ரெட்லி ஆமையினங்கள் தங்களது இனப்பெருக்க காலமான ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரையிலான காலங்களில் வங்கக் கடலோரப் பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டுச் செல்வது வழக்கம்.
இவ்வாறு இடப்படும் முட்டைகளை விலங்குகள், மனிதா்கள் சேதப்படுத்துவது தொடா்ந்தது. இதனால், குஞ்சு பொரிக்கும் திறன் குறைந்து இந்த வகை ஆமையினம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதைத் தடுப்பதற்காக தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, வனத் துறை மூலமாக முட்டைகளை பத்திரமாகச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்டு பொரித்த குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விடுவது வழக்கம்.
அதன்படி, கடலூா் தேவனாம்பட்டினம் கடலில் 300-க்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன. வன ஆா்வலா் செல்லா மற்றும் வனத் துறை அதிகாரிகள், கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டு ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனா்.
தொடர்புடையது

3 மாத சிகிச்சைக்குப் பின் கடலில் விடப்பட்ட ஆமை! என்ன நேர்ந்தது?

514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

வேதாரண்யம் கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

கோடியக்கரையில் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை கடலில் விடப்பட்டது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


