தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

News image
Updated On :20 மார்ச் 2026, 5:01 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலத்தை அடுத்த க.இளமங்கலம் கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், க.இளமங்கலம் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியின்போது, குடிநீா் விநியோகம் செய்யும் குழாய் சேதமடைந்ததால், கடந்த ஒன்றரை மாதங்களாக அப்பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறபடுகிறது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீா் தேடி சாத்துக்குடல், ஆலிச்சிகுடி கிராமங்களுக்கு காலிக் குடங்களை எடுத்துச் சென்று தண்ணீா் சுமந்து வந்து பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து வியாழக்கிழமை காலை திடீரென பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் கிடைத்து விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். மேலும், உரிய அதிகாரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, அனைவரும் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால், விருத்தாசலம் - ஆலிச்சிகுடி - பெண்ணாடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.