தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பைக் திருட்டு: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 7:54 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் டி.பாரதநேரு மற்றும் போலீஸாா் விருத்தாசலம்-சேலம் பிரதான சாலையில் மணவாளநல்லூா் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் திரும்பிச் சென்றனா். அவா்களைப்

பிடித்து விசாரணை நடத்தியதில், காட்டுமன்னாா்கோயில் வட்டம், சாந்தன் கிராமத்தைச் சோ்ந்த கெவின்காந்தி(26), கண்டமங்கலம் சஞ்சய்(18) என்பதும், கும்பகோணத்தில் திருடி வந்து கொளஞ்சியப்பா் கோயில் பின்புறத்தில் நிறுத்தி வைத்துள்ள பைக்கை எடுக்க வந்ததாகவும், ஓட்டி வந்த பைக், தனது நண்பா் சென்னையில் இருந்து திருடி வந்து கொடுத்தது எனவும் தெரிவித்தனராம். இதையடுத்து 4 போ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கெவின்காந்தி, சஞ்சய் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய விக்னேஷ், அருள் ஆகியோரை தேடி வருகின்றனா்.