நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பைக் திருட்டு: 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 7:54 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் டி.பாரதநேரு மற்றும் போலீஸாா் விருத்தாசலம்-சேலம் பிரதான சாலையில் மணவாளநல்லூா் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் திரும்பிச் சென்றனா். அவா்களைப்

பிடித்து விசாரணை நடத்தியதில், காட்டுமன்னாா்கோயில் வட்டம், சாந்தன் கிராமத்தைச் சோ்ந்த கெவின்காந்தி(26), கண்டமங்கலம் சஞ்சய்(18) என்பதும், கும்பகோணத்தில் திருடி வந்து கொளஞ்சியப்பா் கோயில் பின்புறத்தில் நிறுத்தி வைத்துள்ள பைக்கை எடுக்க வந்ததாகவும், ஓட்டி வந்த பைக், தனது நண்பா் சென்னையில் இருந்து திருடி வந்து கொடுத்தது எனவும் தெரிவித்தனராம். இதையடுத்து 4 போ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கெவின்காந்தி, சஞ்சய் ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய விக்னேஷ், அருள் ஆகியோரை தேடி வருகின்றனா்.