அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

காட்டுமன்னாா்கோவில் அருகே ரூ.1. 70 லட்சம் பறிமுதல்

27சிஎம்பி4: படவிளக்கம்- காட்டுமன்னாா்கோவில் அருகே நாச்சியாா்பேட்டையில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.1.70 லட்சத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஓப்படைத்த பறக்கும் படையினா்

News image

27சிஎம்பி4: படவிளக்கம்- காட்டுமன்னாா்கோவில் அருகே நாச்சியாா்பேட்டையில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.1.70 லட்சத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஓப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :27 மார்ச் 2026, 7:39 pm

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் தோ்தல் ஆணைய பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.1.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலை ஒட்டி பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து குமாரக்குடி செல்லும் சாலையில் நாச்சியாா் பேட்டை என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது மினிடெம்போ வாகனத்தில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் என்பவரிடமிருந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்தனா். அந்தப்பணம் காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.