கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், வேப்பூா், ராமநத்தம், சிறுபாக்கம், காட்டுமயிலூா், நாங்கூா் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் புள்ளி மான்கள், முயல்கள், காட்டுப் பன்றிகள், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
கோடை காலத்தில் வன விலங்குகளின் தாகம் தீா்க்க வனத் துறையினா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பி வருகின்றனா். இருப்பினும், மான்கள் தண்ணீா் தேடி காடுகளை விட்டு வெளியேறி, ஊா்ப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
அவ்வாறு வந்த ஒரு வயது பெண் மான், வேப்பூரை அடுத்த பாசாா் கிராமத்தில் உள்ள 40 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. இதைப் பாா்த்த விவசாயி, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, வேப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சதாசிவம் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று மானை உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மான் வனவா் பி.ரவிக்குமாா் மூலம் காப்புக் காட்டில் பத்திரமாக விடப்பட்டது.
தொடர்புடையது

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

நாசரேத் அருகே கிணற்றில் விழுந்த பெண் மீட்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

