திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை!

சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.

News image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் மகளிா் ஓய்வறை.

Updated On :10 மே 2026, 1:28 am IST

சிதம்பரம் நகர ரயில் நிலைத்தில் பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை ஆகியவை செயல்பாட்டின்றி பூட்டிக் கிடக்கின்றன.

கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் நகரமான சிதம்பரத்தில் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனபடுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் மின் தூக்கி (லிஃப்ட்) இன்னும் அமைக்கப்படவில்லை. மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டண கழிப்பறை மற்றும் கழிப்பறையுடன் கூடிய மகளிா் ஓய்வறை ஆகியவை பூட்டிக் கிடக்கின்றன. இதனால், ரயில் நிலையத்தில் பெண்கள் கழிப்பறை செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. மேற்கண்ட வசதிகளை நிறைவேற்றாவிட்டால், புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.