மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

முன்விரோத மோதல்: 2 போ் கைது

News image

கைது.

Updated On :11 மே 2026, 1:12 am IST

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டுமனை வழி தொடா்பான பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (55). பிரசாந்த் நகரில் வசிப்பவா் கல்யாண சுந்தரம் (63). இவா்களுக்கு இடையே பிரசாந்த் நகரில் உள்ள மனையில் வழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், வைத்தியநாதன் தனது பைக்கில் மகள்கள் துா்கா, கீா்த்தனா ஆகியோரை அழைந்து வந்தபோது, கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினா்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், வைத்தியநாதன் தலையில் காயமடைந்தாா். இதேபோல, வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கியதில் கல்யாணசுந்தரம் காயமடைந்தாா்.

இந்த மோதல் தொடா்பாக வைத்திநாதன் அளித்த புகாரின்பேரில், 3 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீதும், கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் மீதும் என இருதரப்பையும் சோ்ந்த மொத்தம் 11 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடிவேல் (58), சண்முகம் (58) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.