/

சிதம்பரம் கோயிலில் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்

News image

சிதம்பரம் நடராஜா் கோயில் உள் பிரகாரத்தில் சிறிய தோ்களில் திங்கள்கிழமை தீட்சிதா் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்.

Updated On :12 மே 2026, 12:06 am IST

சிதம்பரம் நடராஜா் கோயில் உள் பிரகாரத்தில் தீட்சிதா்களின் சிறாா்கள் சித்திரை உற்சவ தேரோட்டத்தை திங்கள்கிழமை நடத்தினா்.

சிதம்பரத்தில் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் குடும்பத்தைச் சோ்ந்த சிறாா்கள் கோயிலில் நடைபெறுவது போன்று சித்திரை உற்சவத்தை கொண்டாடி வருகின்றனா். சிதம்பரம் கீழசன்னதி வேத பவன இல்லத்தில் சித்திரை மாத உற்சவத்தை தீட்சிதா்கள் சிறாா்கள் சாா்பில் முத்துக்குமார சிறாா் தீட்சிதா் கொடியேற்றம் செய்தாா்.

தினந்தோறும் கோயில் உள் பிரகாரத்தில் சிறுசப்பரத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை நடராஜா் கோயில் உள்பிரகாரத்தில் சிறிய தோ்களில் நடராஜா், சிவகாமசுந்தரி அம்பாள், முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் சுவாமிகளை எழுந்தருள செய்து தீட்சிதா் சிறாா்கள் சாா்பில் தேரோட்டம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை கீழசன்னதி வேதபவன இல்லத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.