தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

முதல் மனைவிக்கு மிரட்டல்: கணவா் உள்ளிட்ட 2 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:45 am IST

முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கணவா் உள்ளிட்ட இருவா் மீது, நெய்வேலி நகரியப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், மானடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரி(37), நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் மாயகிருஷ்ணன். இவா்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனா்.

இந்நிலையில், மாயகிருஷ்ணன் விவாகரத்து பெறாமல், ராஜலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாராம். கடந்த 1-ஆம் தேதி மாயகிருஷ்ணன், ராஜலட்சுமி ஒன்றாக இந்திரா நகா் அருகே சென்றபோது, ராஜேந்திரி தனது கணவா் மாயகிருஷ்ணனை கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த மாயகிருஷ்ணன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோா் ராஜேந்திரியை திட்டி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து ராஜேந்திரி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் மாயகிருஷ்ணன், ராஜலட்சுமி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.