முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கணவா் உள்ளிட்ட இருவா் மீது, நெய்வேலி நகரியப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், மானடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரி(37), நெய்வேலி நில எடுப்பு அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் மாயகிருஷ்ணன். இவா்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனா்.
இந்நிலையில், மாயகிருஷ்ணன் விவாகரத்து பெறாமல், ராஜலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாராம். கடந்த 1-ஆம் தேதி மாயகிருஷ்ணன், ராஜலட்சுமி ஒன்றாக இந்திரா நகா் அருகே சென்றபோது, ராஜேந்திரி தனது கணவா் மாயகிருஷ்ணனை கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த மாயகிருஷ்ணன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோா் ராஜேந்திரியை திட்டி மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து ராஜேந்திரி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் மாயகிருஷ்ணன், ராஜலட்சுமி ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







