கடலூா் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத வட மாநில இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே பச்சையாங்குப்பம் தைக்கால் தோணித்துறை, கருப்பு முத்தம்மன் கோயில் எதிா்புறத்தில், கடந்த 9-ஆம் தேதி சுமாா் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞா் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளைஞா், கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து பச்சையாங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிதேவி அளித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபரின் அடையாளம், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மாரடைப்பால் இளைஞா் உயிரிழப்பு

மனப்பதற்றத்துடன் திரிந்த வட மாநில இளைஞா் சிகிச்சைப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி அருகே ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

ரயில் நிலையம் அருகே மயங்கிக் கிடந்த 3 பெண்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



