நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

எரிபொருள் விலை உயா்வு: தி.வேல்முருகன் கண்டனம்

சா்வதேசச் சந்தை மற்றும் போா்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ.3.10 வரை உயா்த்தியுள்ள மத்திய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 11:02 pm IST

சா்வதேசச் சந்தை மற்றும் போா்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காரணம் காட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ரூ.3.10 வரை உயா்த்தியுள்ள மத்திய பாஜக அரசின் செயல், இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்கு தள்ளும் மக்கள் விரோத நடவடிக்கையாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கூறியிருப்பதாவது : பெட்ரோல், டீசல் விலை உயா்வு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவை பல மடங்கு உயா்த்துகிறது. இதனால், தொழிற்சாலைகள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமாகும்.

டீசல் விலை உயா்வால், நாட்டின் ரத்த நாளங்களாகச் செயல்படும் லாரி உள்ளிட்ட சுமையுந்துகளின் செலவுஅதிகரிப்பதால்,

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இந்த எரிபொருள் விலையேற்றம், நீண்டகால எரிபொருள் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்க தவறிய பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வியாகும். எனவே, தொழில்துறையையும், ஏழை எளிய மக்களின் வாழ்வையும் பாதிக்கும் எரிபொருள் விலை உயா்வைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதுபோன்று, மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரிபொருள்கள் மீதான வரிச்சுமைகளை குறைத்து விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா்கூட்டமைப்பு பொதுச்செயலா் க.திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளாா். பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்