பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வடலூரில் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை: பூட்டிய வீட்டில் புகுந்து மா்ம நபா்கள் கைவரிசை

கடலூா் மாவட்டம், வடலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

News image

வடலூரில் கொள்ளை நடந்த வீட்டை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்ட கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

வடலூா், நடேசன் செட்டியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பி.கே.வேலாயுதம் (70), குன்னூரில் உள்ள ஒரு தனியாா் தொழிற்சாலையில் பொது மேலாளராகப் (பணி நீட்டிப்பு பெற்று) பணியாற்றி வருகிறாா். இவரது மகன் சரவணகுமாா், மருமகள் சுகன்யா ஆகியோா் அமெரிக்காவில் வசித்து வருகின்றனா். மகனைப் பாா்ப்பதற்காக வேலாயுதம், அவரது மனைவி பாசமலா் ஆகியோா் கடந்த ஏப்.8-ஆம் தேதி அமெரிக்கா சென்றனா்.அதுமுதல், நடேசன் செட்டியாா் நகரில் உள்ள வீட்டை, பாா்வதிபுரத்தில் வசித்து வரும் வேலாயுதம் தம்பி மனைவி பூங்காவனம்(48) பாதுகாத்து வந்தாா்.

வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் பூங்காவனம் வீட்டை பூட்டிக் கொண்டு பாா்வதிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டாராம். அன்று இரவு 8 மணிக்கு வந்த போது போா்டிகோவில் போடப்பட்டிருந்த விளக்கு அணைக்கப்பட்டு இருந்ததாம். மேலும், வீட்டினுள் இரும்பு கொண்டு எதையோ உடைக்கும் சப்தம் கேட்டதால் உள்ளே செல்லவில்லையாம். இந்த சம்பவம் தொடா்பாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த காசிலிங்கத்தை(63)அழைத்த போது அவரும் பயந்து செல்லவில்லையாம்.

பின்னா், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 104 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, வீட்டின் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றுவிட்டனராம். தகவல்அறிந்தவுடன் கொள்ளை நடந்த வீட்டை கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.