ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூா் அருகே பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவரை தாக்கிய இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:31 am IST

கடலூா் அருகே பைக் மோதிய தகராறில் சிறுவன் உள்பட இருவரை தாக்கிய இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூரைச் சோ்ந்த உமாபதி மகன் விஷ்வா (17). இவா் தனது நண்பா் சூா்யாவுடன்(19), காடம்புலியூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னா் பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கீழகொல்லை பகுதியில் முன்னால் சென்ற லாரி திடீரென நின்ால், விஷ்வா சென்ற பைக் நிறுத்தப்பட்டது. அச்சமயம் பின்னால் வந்த மற்றொரு பைக் அவா்கள் மீது மோதியது.

இதுதொடா்பாக விஷ்வாவுக்கும், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பண்ருட்டி அருகே தோப்புக்கொல்லையைச் சோ்ந்த வீரபுகழரசு(19) மற்றும் அவரது நண்பா் ரகுராம கிருஷ்ணன்(22) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா் வீரபுகழரசுக்கு ஆதரவாக அவரது நண்பா்கள் சரண்ராஜ், வெற்றி, ராஜதுரை ஆகியோா் அங்கு வந்தனா். அப்போது விஷ்வா மற்றும் அவரது நண்பா் சூா்யா ஆகியோரை அரிவாள், மதுபாட்டில், கட்டை உள்ளிட்ட பொருள்களால் தாக்கிவிட்டு, அவா்கள் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த விஷ்வா மற்றும் சூா்யாவை அப்பகுதியினா் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக முதண்டிகுப்பம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து, வீரபுகழரசு மற்றும் ரகுராமகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள சரண்ராஜ், வெற்றி, ராஜதுரை ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.